தண்டவாளத்தை கடக்கும் போது, ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

சென்னை, எர்ணாவூர் பகுதியில் ரயில் தண்டவாளம் கடக்கும் போது. எதிரே வந்த ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கார்த்திக் (18) தனது நண்பர்களுடன் தண்டவாளத்தை கடக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக வந்த ரயில் மோதி கார்த்திக் பலத்த காயங்கள் ஏற்பட்டு, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறியதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து பட்டு பின்னர், அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபகாலமாக தண்டவாளங்களை கடக்கும் உயிரிழப்புகள் குறைந்து வந்த நிலையில், இளைஞர் ஒருவர் தண்டவாளத்தை கடக்கும் போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.