பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.1 கோடி 75 லட்சம் பணம் பறிமுதல்; கஞ்சா சோதனையில் சிக்கியது

சென்னை, பெரம்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சா சோதனைக்கு சென்ற போலீசார், கணக்கில் வராத ரூ.1 கோடி 75 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். ஹவாலா பணமா என விசாரிக்கின்றனர்.
சென்னை, பெரம்பூர் ரயில் நிலையத்தில், கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த ரயில் ஒன்றில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், ஆந்திராவை சேர்ந்த அபிஷேக் (26), சூரிய சந்திர காந்த் (28) ஆகியோர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.
அந்த சோதனையில், அவர்கள் கணக்கில் வராத ரூ.1 கோடி 75 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகித்து, அவற்றை பறிமுதல் செய்து, வருமானத்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.